நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

313 0

தங்காலை – சீனிமோதர கடற்பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன இரண்டு இளைஞர்களின் சடலங்கள் சற்று முன்னர் மீட்கப்பட்டுள்ளன.

காவற்துறை, கடற்படையும் மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்து அந்த சடலங்களை மீட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் நீராட சென்ற போதே இவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

17 வயதான இளைஞர்கள் இருவரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.