சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் கைது

256 0

தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் 8 பேரை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

மன்னார் – வன்கொலைய்பாடு கடற் பரப்பில் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.