யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்., மானிப்பாய் வீதியைச் சேர்ந்த சிவபாதம் சிவசுதன் (வயது 40) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது வீட்டில் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.