சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

146 0
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர்  ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹியூமன் இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பில்  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக  சந்திரகுப்த  இன்று (18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றிருந்தபோதே   அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.