எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது!

92 0

அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) யாழ்ப்பாணம் – கோவளம் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவர்கள் அத்துமீறி வருவதற்கு பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.