தனது 68வது வயதில் சட்டமாணி பட்டம் பெற்றார் கந்தையா அருந்தவபாலன்!

73 0

சட்டம் படித்தவர்களே இனி தமிழர்களை காப்பாற்ற முடியுமென்ற பிரச்சாரங்களின் மத்தியில் வயதொரு தடையல்ல, என தெரிவித்து தனது 68வது வயதில் சட்டமாணி பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார் கந்தையா அருந்தவபாலன்.

முன்னாள் அதிபரான அருந்தவபாலன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கிய பதிவியிலிருந்து வெளியேறி பின்னரான சி.வி.விக்கினேஸ்வரனுடன் கூட்டு சேர்ந்தி;ருந்தார்.

தற்போது அவருடனும் முரண்பட்டுள்ள நிலையில் சட்டம் படித்தவர்களே இனி தமிழர்களை காப்பாற்ற முடியுமென்ற பிரச்சாரங்களின் மத்தியில் திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி கற்கையினை பூரணப்படுத்தி தனது பட்டத்தை பெற்றுள்ளார்.