கொழும்பு 5, விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கொழும்பு விஜேராம மாவத்தை பகுதியைச் சேர்ந்த மித்ராணி பெர்னாண்டோ என்ற பெண்ணாவார்.
இவர் தனது வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் தனது வீட்டின் அறையினுள் வாய் மற்றும் மார்பு பகுதிகளில் இரத்தம் கசிந்த நிலையில் தரையில் சடலமாக கிடந்துள்ளார்.
பொலிஸ் அவசர அழைப்பு சேவையான 119 இற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து காணப்படும் நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.