யாழ் மணிக்கூட்டு கோபுர மணி ஒலியை யாழ் ஒலி யாக மாற்றித்தரிமாறு யாழ் மாநகரசபை ஆணையாளர் கோரிக்கை

423 0
யாழ் நகரில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தின் கடிகார மணி ஒலியை யாழ் இசைக்கருவியின் ஓசையாக மாற்றியமைத்து தருமாறு யாழை அன்பளிப்பு செய்த புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜியிடம் யாழ் மாநகர சபை ஆணையாளர் பொ. வாகீசனால் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் குறியீட்டை பிரதிபலிக்கும் “யாழ்” இசைக்கருவியை
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவரும் புலம்பெயர் தமிழரான கந்தமூர்த்தி கலாரெஜி என்பவர் யாழ்ப்பாண பொது நூலகத்துக்கு நேற்றைய தினம் அன்பளிப்பு செய்திருந்தார்.
அந்த  நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்படி கோரிக்கையினை யாழ் மாநகர ஆணையாளர் கந்தமூர்த்தி கலாரெஜியிடம் முன்வைத்தார்.
யாழ் நகர் மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணித்தியாலத்திக்கும்
ஒலி எழுப்புகின்றது. அந்த ஒலியை யாழின் ஓசையாக இனிவரும் காலங்களில் ஓலி எழுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என ஆணையாளர் கோரினார். அதற்கு அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்ததுடன் அதற்குரிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.
அந்த வகையில்  யாழ் மணிக்கூட்டு கோபுரத்தில் அமைத்துள்ள கடிகாரத்தில் இருந்து மிக விரைவில் “யாழ்”ஓசை மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது