பிறந்து ஒரு நாளேயான குழந்தை சடலமாக மீட்பு

37 0
மஹியங்கனை பொலன்னறுவை வீதியின் அலுத்தரம பிரதேசத்திலுள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் பிறந்து ஒரு நாளேயான குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது கறுப்பு நிற பையொன்றினால் சுற்றியிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அழுத்தரம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.