நாராஹேன்பிட்டியில் போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்த நபர் கைது!

23 0

நாராஹேன்பிட்டி பிரதேசத்தில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி பணத்துக்காக போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான  புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாராஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய குறித்த நபர், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களிடம் பணத்தைப் பெற்று, போலி  முத்திரைகளை பயன்படுத்தி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்துள்ளதாக விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.