பாணம கடலில் காணாமல்போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார்

97 0

பாணம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் நீராடிய  சிறுவன் கடலில்  காணாமல்போயுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து அப்பகுதியில் தோடுதலில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போன சிறுவன் கம்பஹா –  கணேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவராவார்.

குறித்த சிறுவன் கணேமுல்ல பிரதேசத்திலுள்ள விகாரையொன்றின் சில தேரர்கள் மற்றும் மேலும் சில நபர்களுடன் கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே காணாமல் போயுள்ளார்.

காணாமல்போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸ் கடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பாணம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.