இன்று புதன்கிழமை (13) அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றறுள்ளதுடன் தீ பரவலினால் கட்டுமானப் பொருட்கள் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன .
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கடையை உடைத்து பெற்றோல் ஊற்றி தீ வைத்துள்ள காட்சிகள் சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ளதாக அக்மிமன பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இந்த தீ வைக்கப்பட்ட கட்டிடம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு சொந்தமானது எனவும் அவர் இந்த கட்டிடத்தை வாடகையின் அடிப்படையில் வேறு ஒருவருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது .
சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அக்மீமன பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.