வேகக்கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

51 0

திருக்கோவில் – பொத்துவில் பிரதான வீதியில் காஞ்சிரங்குடா பகுதியில் சுகாதார திணைக்களத்திற்கு சொந்தமான கெப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்திலுள்ள பயணிகள் பஸ் நிறுத்துமிடத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,

கெப் வாகனத்தில் பயணித்தவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதுடன், பயணிகள் பஸ் நிலையத்தில் எவரும் இல்லாத நிலையில் எந்த விதமான உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லையென பொலிஸார்  தெரிவித்தனர்.