மக்களின் குரலுக்கே மதிப்பு – ரணில்

360 0

indexமக்களின் குரலை தவிர வோறு யாருடைய கோஷங்களுக்கும் செவிகொடுக்க அரசாங்கம் தயார் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டார்.
மக்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்க தற்போதைய அரசாங்கம் எப்போதும் தயாராகவே உள்ளது.
எனினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர் தரப்பினரால் எழுப்பப்படும் கோஷங்களை கருத்தில் கொள்ளப்போவதில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், இந்த நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாக்க மக்களுடன் வீதிக்கு இறங்கவும் தாம் தயாராக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.