மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுதலை செய்த கொழும்பு மேல் நீதிமன்றம்!

105 0

வெற்றுக் கணக்கில் காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக் கொண்ட மோசடி வழக்கிலிருந்து திலினி பிரியமாலியை விடுவித்து விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பெத்தபண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரசு தரப்பு வழக்கறிஞர் மற்றும் தரப்பு சட்டத்தரணிகளின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

2010 ஆம் ஆண்டு மாத்தறை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 8 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனத்தை பெற்றுக்கொண்டு பணமில்லாத கணக்கிலிருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.