வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் : அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு.!

229 0

றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் பிரதி காவற்துறைமா அதிபர் அநுர சேனாநாயக்க  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.