களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதிக்கு பிள்ளையான் உரிமைகோர முடியாது!

74 0

களுவாஞ்சிக்குடி உள்ளூர் வீதி புனரமைப்புக்கு 2022ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியிலே  ஆர்.டி.ஏ தான் செய்கிறதே தவிர பிள்ளையானோ மற்ற எவருமே உரிமை கோர முடியாதென மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திற்கு பெறுப்பான பொறியியலாளரொருவர் தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிக்குடியின்  முன்னாள் பிரேதேச சபை உறுப்பினரொருவர் வீதி புனரமைப்பு தொடர்பில் குறித்த பொறியியலாளரிடம் தொலைபேசியூடாக வினவிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் களுவாஞ்சிக்குடி மக்கள் வீதி புனரமைப்பு தொடர்பில் அவருக்கு அளிக்கப்பட்ட கோரிக்கைக்கமைய வீதியை பார்வையிட சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.