செங்கடல் பகுதியில் இஸ்ரேல் அமெரிக்க கப்பல்கள் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

160 0
ஆயுதங்களுடன் ஆளில்லா விமானத்தையும் கடற்படை ஏவுகணையொன்றையும் பயன்படுத்தி செங்கடல் பகுதியில் இரண்டு இஸ்ரேலிய கப்பல்களை தாக்கியுள்ளதாக யேமனின் ஹவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

யுனிட்டி எக்ஸ்புளோரர் நம்பர் நைன்  என்ற இரண்டு இஸ்ரேலிய கப்பல்களை தாக்கி அழித்துள்ளதாக ஹவுத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஹெளத்தி அமைப்பினர் தங்களின் கடற்படையின் எச்சரிக்கையை இரண்டு கப்பல்களும் புறக்கணித்ததை தொடர்ந்து அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டதாக  தெரிவித்துள்ளனர்.

செங்கடல் பகுதியில் கப்பல் ஒன்று  ஆளில்லா விமானதாக்குதலிற்குள்ளாகியுள்ளன என தெரிவித்துள்ள பிரிட்டனின் கடற்சார்பாதுகாப்பு  அமைப்பு யேமனின் ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து 101 கிலோமீற்றர் தொலைவில் உள்ள  பகுதியில் மற்றுமொரு கப்பல் ஆளில்லா விமானதாக்குதலிற்குள்ளாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க யுத்தகப்பல் ஒன்றும் ஏனைய கப்பல்களும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளன என்பதை பென்டகன் உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கனெரி மற்றும் வர்த்தக கப்பல்கள் மீது செங்கடலில் தாக்குதல் இடம்பெற்றுள்ளதை பென்டகன் உறுதி செய்துள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதல்களிற்கு பின்னர்  இஸ்ரேல் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்த பின்னர் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலிய கப்பல்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர்.