மட்டக்களப்பில் மழைநீர் தேங்கியுள்ளதால் சிரமத்தில் மக்கள்

215 0

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் மழை நீர் வழிந்தோட முடியாமல் தேங்கியுள்ளதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதியில்  அமைந்துள்ள பெரியபோரிவு, பட்டாபுரம், முனைத்தீவு, கோவில்போரதீவு, பழுகாமம், உள்ளிட்ட பல கிராமங்களில் மழைநீர் வழிந்தோட முடியாமலுள்ளதானால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

மழைவெள்ளம் வழிந்தோடுவதற்கு ஏற்ற வடிகான் வசதிகள் இன்மையால்தான் இவ்வாறு நீர் தேங்கியுள்ளதாகவும், இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கருத்திற் கொண்டு வடிகான் வசதிவாய்ப்புக்களை ஏற்படுத்தி தேங்கியுள்ள மழை நீரை வழிந்தோடச் செய்வதற்கு உடன் முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதன்படி மழை நீர் தேங்கியுள்ளதனால் மக்களின் வீடுகளுக்குள்ளும் நீர் புகுந்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .