மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

28 0

எரிபொருள் மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மாலை 4.00 மணியளவில் கொழும்பு 07 பிளவர் வீதியில் அமைந்துள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மேலும் தெரிவித்துள்ளார்.