நம்பிக்கைத் துரோகம் செய்த வர்த்தகரை 25 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்!

49 0

சுமார் 14 இலட்சம் ரூபா  பெறுமதியான இயந்திரத்தை விற்பனை செய்து நம்பிக்கைத் துரோகம் செய்த  குற்றச்சாட்டின் பேரில் குற்றவாளியாக காணப்பட்ட  வர்த்தகர் ஒருவருக்கு அந்த வழக்கில் வாதியான வர்த்தகருக்கு 25 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டார்.

மேலும், முறைப்பாட்டாளருக்கு  இழப்பீடு வழங்கப்படாவிட்டால் குற்றவாளிக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றவாளியான சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியான இயந்திரமொன்றை விற்பனை செய்து அந்தப் பணத்தை தனக்கு வழங்கவில்லை என மற்றொரு வர்த்தகர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.