டென்மார்க்கில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்.

155 0

தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக தம் இளம் இன் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கு, Herning மற்றும் Holbaek நகரங்களில் இடம் பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில்களில்களில், மக்கள் எழுச்சியுடன் வருகை தந்து வணக்கம் செலுத்தினர்.

எமது விடுதலைக்காய் வித்தானவர்களின் உணர்வுகள், இலட்ச்சியத்தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையுடன் புனித தன்மை வாய்ந்தவையாகவும் உள்ளன அந்தவகையில் மாவீரர் நாள் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி பின்பு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, எமது தேசியத்தலைவரின் 2008ம் ஆண்டு மாவீரர் நாள் உரை திரையில் காண்பிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 2023 மாவீரர் நாளுக்கான உத்தியோகபூர்வ கொள்கை பகுப்பு அறிக்கை ஒலியலை மூலம் ஒலிபரப்பப்பட்டது.

சரியாகத் தாயக நேரம் மாலை 6.05 மணிக்கு மணியொலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர் குடும்ப உறவுகள் சுடரேற்றியவுடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தொடந்து முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தேசநிலா இசைக்கலைஞர்கள் மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர் மற்றும் பொதுமக்களாலும் மலர் வணக்கம் செலுத்தி ஈகைச்சுடரேற்றப்பட்டது.

மாவீரர் நாள் நிகழ்வில் டென்மார்க் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள், நோர்வே தமிழ்முரசம் வானொலியின் பணிப்பாளர் மனோ நாகலிங்கம், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் ஆகியோரின் சிறப்புரைகளுடன், மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் மாணவர்கள் ஆசிரியர்களின் கவிதைகள், பேச்சுக்கள், பாடல்கள், கருத்துக்களம் மற்றும் எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து டென்மார்க்கின் நடன ஆசிரியர்களின் கலைக்கல்லலூரி மாணவர்கள் வழங்கிய நடனங்களுடன், கலைபண்பாட்டுக் கழகம் தயாரித்து வழங்கிய “Operation எல்லாளன்” நாடகமும் இடம் பெற்றது.

தொடர்ந்து அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2023இல், டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்கள் மதிப்பளிக்கபட்டனர்.

அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்தியதுடன் மக்களுக்கு எழுச்சியையும் ஊட்டியதாக அமைந்தன.

தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.

மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை இளையோரின் கைகளி்ல் உள்ளது. அத்துடன் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென, இன்றைய நாளின் செயல்பாடுகளின் ஊடாக இளையோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.