கடன் உறுதிப்படுத்தல் கடிதம் இன்னும் பெறவில்லை?

62 0

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் குழு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் உத்தியோகபூர்வ கடனாளிகள் குழுவிடமிருந்து உறுதிப்படுத்தல் கடிதத்தை இந்நாட்டு அதிகாரிகள் இன்னும் பெறவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை, மே 2022 முதல் வெளிநாட்டுக் கடனை செலுத்துவதை நிறுத்தியது.

இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.