உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் புல்மோட்டையில் ஒருவர் கைது

177 0

திருகோணமலை – புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் புல்மோட்டை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் திருகோணமலை – புல்மோட்டை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய நபராவார்.

புல்மோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.