மாவீரர் நாளுக்கு தடை கோரிய மனு : யாழ் நீதிமன்றில் இன்று விசாரணை

51 0

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்றைய தினம் திங்கட்கிழமை  (27) யாழ்.நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெற்று வரும் நிலையில் அதற்கு தடை கோரியே  யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் இடம்பெறவுள்ளது.