வவுனியா – தோணிக்கல் இரட்டைக் கொலை!!

79 0

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, 4ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் ஹொரவப்பொத்தானை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சப்பவத்தில் இருவர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் முன்னதாக ஆறு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்கள் உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

குறித்த மூவரும் தலைமறைவாக இருந்ததால் அவர்களது கடவுச் சீட்டுகள் நீதிமன்றத்தால் முடக்கப்பட்டதுடன், அவர்களை கைது செய்ய கடந்த செப்ரெம்பர் மாதம் 7 ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் பகிரங்க பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.