மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் சுமந்திரன் எம் பி பங்கேற்பு!

113 0

வடமராட்சியில் இன்றைய தினம் மாவீரர்களின் பெற்றோர்கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றிருந்த நிலையில் குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரனும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்

தேர்தல் நெருங்குகின்ற நிலையில் இன்று வடமராட்சியில் இடம்பெற்றமாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டமையானது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில்இடம் பெற்ற நேர்காணலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தினை தான் ஏற்கவில்லை என அடியோடு மறுத்த சுமந்திரன் எம் பி இதனை நான் வடக்கிலும் தெற்கிலும் தைரியமாக கூறுவேன் என தெரிவித்த சுமந்திரன் எம்பி, இன்று வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டமை அனைவரையும் ஆச்சரியத்திற்குட்படுத்தியுள்ளது