காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை (23) குறித்த சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்டுள்ளனர். மீட்கப்பட்டுள்ள சடலம் ஜலீல் ரசாத் என அடையாளம் காணப்படுள்ளதுடன் அவரது மனைவி 7 மாத கர்ப்பிணி எனவும் தெரியவருகிறது.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.