மற்றுமொரு ஏவுகணைத் தாக்குதல் கருவியை பரிசோதனை செய்துள்ளது வடகொரிய

358 0

வடகொரிய மற்றுமொரு ஏவுகணைத் தாக்குதல் கருவியை பரிசோதனை செய்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு பாரிய கண்டனம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைக்கான முதல் நடவடிக்கையாக இது இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இந்த மாத ஆரம்பத்தில் வடகொரிய மேற்கொண்ட ஏவுகணை சோதனை ஒன்று தோல்வி கண்டிருந்தது.

இதனை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கருவியை பயன்படுத்தி விரைவில் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனைக்கு உள்ளாக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.