கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்திலிருந்து சடலம் மீட்பு!

50 0

கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்திலிருந்து  ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்துக்கு  நேற்று திங்கட்கிழமை (13) மாலை முறைப்பாடு கிடைத்துள்ளது. அதன்படி கம்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர்.

உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டதையடுத்து கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பேரில் பிரேத பரிசோதனைக்காக  கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.