குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் கைது செய்யப்படுவதனைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 17ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
அது தொடர்பான மனு இன்று செவ்வாய்க்கிழமை (14) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நவம்பர் மாதம் 17ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.