தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்து

85 0

தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

நாளை 8 ஆம் திகதியும் நாளை மறுதினம் ,9 ஆம் திகதியும்,10 ஆம் திகதியும் இவ்வாறு தபால் சேவையின் சகல சேவையாளர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யபட்டுள்ளதாகவும் சகலரும் சேவைக்கு சமுகளிக்க வேண்டுமெனவும் தபால்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலக கட்டிடங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் தீர்மானித்திருந்த நிலையிலேயே இவ்வறிவிப்பை தபால் மா அதிபர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.