தலவாக்கலை – வடகொட ரயில் நிலையங்களுக்கிடையில் மண்சரிவு

95 0

தலவாக்கலை மற்றும் வடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (05) பிற்பகல் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

பலத்த மழை காரணமாக மண்மேடு சரிந்துள்ளதாகவும், ரயில் பாதையில் விழுந்துள்ள மண்ணை அகற்றி பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மலையக ரயில் பாதையில் பயணிக்கும் ரயில்கள் தாமதமாகலாம் என நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.