ரயில்வே பொது முகாமையாளராக எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார கடமைகளை பொறுப்பேற்றார் !

104 0

அமைச்சர்  பந்துல குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய ரயில்வே பொது முகாமையாளராக பொறியியலாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டார நியமிக்கப்பட்டதையடுத்து  இன்று வெள்ளிக்கிழமை (03) காலை அவர் தனது கடமைகளை பொறுப்பெடுத்தார்.

இவர் நுகவெல மத்திய மகா வித்தியாலயம் மற்றும் மாத்தளை வித்தியாலயத்தில் கல்வி கற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டமும் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் ஆவார்.

இவர் 1996 ஆம் ஆண்டு இலங்கை ரயில்வே திணைக்களத்தில் உதவி மாவட்ட பொறியியலாளராக இணைந்து, மாவட்ட பொறியியலாளராக, பிரதி பிரதம பொறியியலாளராக, பிரதம பொறியியலாளராக மற்றும் மேலதிக பொது முகாமையாளராக பணியாற்றி 27 வருட பொறியியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.