புத்தளம் மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில்..(காணொளி)

286 0

புத்தளம்  மாவட்ட தனியார் பஸ் ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

வட மாகாணத்தில் இருந்து புத்தளம் பிரதான வீதியின் ஊடாக சேவையில் ஈடுபடும் யாழ்ப்பாணம் – கொழும்பு, மன்னார் – கொழும்பு, அநுராதபுரம் – கொழும்பு, கிளிநொச்சி – கொழும்பு, நானாட்டான் -கொழும்பு போன்று தூரப் பயண அரை சொகுசு பஸ் சேவைகள் காரணமாக,

புத்தளம் – கொழும்பு, புத்தளம் – சிலாபம் ஆகிய மார்க்கங்களில் ஈடுபடும் பஸ்களில் பயணிகள், பயணத்தை மேற்கொள்ளாமையால் வருமானம் நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் பஸ் சேவை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதனால் பயணிகள் பல்வேறு சிமரங்களை எதிர் நோக்கியதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.