காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய பொலிசார் – மட்டக்களப்பு போராட்டத்தில் பதற்றம்

169 0

மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களான பெண்களை பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான பெண்களையே பொலிஸார் தாக்கியது மட்டுமன்றி அவ்விடத்திலிருந்து செல்லுமாறும் விரட்டியுள்ளனர். இதில் சில பெண்கள் காயமடைந்துள்ளதோடு மயக்கமடைந்துமுள்ளனர்.

மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.