கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய நபரை சூழ்ந்து தாக்கிய பயணிகள்!

153 0
கம்பஹா ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு பரிசோதிக்கும் உத்தியோகத்தரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரை,  பெண்கள் உள்ளிட்ட பயணிகள் தாக்கியதில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரியும் காயமடைந்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரயில்  பயணச்சீட்டு பரிசோதிக்கும் உத்தியோகத்தர் தாக்கப்படுவதை கண்டு ரயிலுக்காக காத்திருந்த பெண்கள் மற்றும் பயணிகள்  மறியல் போராட்டத்தை ஆரம்பிக்க முயற்சிக்க வேண்டாம் என கூறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.