மயிலத்தமடு போராட்டப் பகுதியில் பறக்கும் ஹெலிகொப்டர்; அப் பகுதியில் பதற்றம்

104 0

மட்டக்களப்பு – மயிலத்தமடு பகுதியில், 990க்கும் அதிகமான பண்ணையர்களை விரட்டியடித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (08) அப்பகுதியில் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டம் இடம்பெறும் பகுதியில் அதிகளவிலான இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் வானில் ஹெலிகொப்டரும் வட்டமிடுவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அப்பகுதிக்குயில் வன்முறை வெடிக்கும் அபாயம் உள்ளதுடன் பதற்றம் நிலவுகிறது.

இந்த போராட்டத்தில் தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்கள் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர். உட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.