இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும்- மோடி

141 0

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை: இஸ்ரேலில் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த செய்திகளை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தில் செயல்படும் ஆயுதக்குழுக்கள் ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்தின. முதல் தாக்குதல் நடத்திய 20 நிமிடங்களில் 5 ஆயிரம் ராக்கெட்களை வீசியதாக அந்த குழுக்கள் தெரிவித்துள்ளன.

தரை வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் நுழைந்த நடத்தப்பட்ட தாக்குதலில், இஸ்ரேலைச் சேர்ந்த பெண் உட்பட 22 பேர் உயிரிழந்தார். 545 பேர் காயம் அடைந்துள்ளனர்.