ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளை மேற்கொள்வதில் சிக்கல் !

42 0
கொழும்பு மற்றும் கண்டி மாவட்ட தேசிய வைத்தியசாலைகளில் இருதயநோய் தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் மேற்கொள்வதில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த ஆஞ்சியோகிராம் பரிசோதனை இயந்திரங்கள் பழுதடைந்து 6 மாதங்களாகியும் இன்னும் பழுதுபார்க்கப்படாமல் உள்ளன. மேலதிகமான ஆஞ்சியோகிராம் பரிசோதனை இயந்திரங்களுக்கும் பற்றாக்குறையாக உள்ளது.

இதனால் இருதயநோயாளிகள் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.