திருகோணமலையில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்

244 0

டெங்கு நோய் வெகுவாக பரவி வரும் திருகோணமலை மாவட்டத்தில் இன்று முதல் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தபபட்டுள்ளது.

சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

முப்படையினர், பொது பாதுகாப்பு படையணி, சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு ஒழிப்பு உதவியாளர்கள் உட்பட்ட 150 குழுக்கள் இதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, குடியிருப்புக்கள் மற்றும் கிணறுகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, டெங்கு நோய் அதிகளவில் பரவியுள்ள திருகோணமலை மற்றும் கிண்ணியா மருத்துவமனைகளுக்கு மேலதிகமாக 20 மருத்துவர்களும் 30 தாதியர்களும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.