கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் உருக்கிலைந்த நிலையில் சடலம் (காணொளி)

243 0

பொகவந்தலாவை, கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து உருக்கிலைந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் கடந்த 8ஆந் திகதி காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையொருவரே நேற்று கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சடலம் உருக்குலைந்த நிலையிலேயே மீட்கப்பபட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முனியாண்டி சங்கர் வயது 44 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 8ஆந் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவரது புகைப்படத்துடன் காணவில்லையென துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன.

எனினும் அடையாளம் காணாதநிலையில் நேற்று ஒரு மாணவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது நாய் குரைப்பதை பார்த்து சடலத்தை கண்டு அறிவித்ததையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.