ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை(காணொளி)

258 0

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க கூடாது என மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீதியில் தாய்மார்கள் வீழ்ந்து கிடப்பதை காண்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு கண் இல்லையா எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்பினர்.

இந்நிலையில் தமக்கான நீதியைப்பெற்றுத்தருவதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.