நில்வலா கங்கையை சூழவுள்ள பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

40 0

நில்வலா கங்கையை சூழவுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

நில்வலா கங்கையின் தாழ்வான பகுதிகளான கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, பஸ்கொட, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை மற்றும் தெவிநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே அந்த பகுதிகளுடன் தொடர்புடைய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.