இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபட்ட 25 இந்தியர்கள் கைது

204 0

சுற்றுலா விசா மூலம் இலங்கை வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 25 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கண்காணிப்பு மற்றும் விசாரண பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்;டனர்.

இவர்களில் 17 பேர், பல்வேறு குடிபான வகைகளை போத்தல்களில் அடைத்து யாழ்ப்பாணம் பிரதேச மக்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட எஞ்சியவர்கள் சாத்திரகாரர்கள்.

இவர்களை எதிர்வரும் தினங்களில் இந்தியாவுக்கு நாடு கடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.