100ரூபா கையூட்டல் பெற்ற இரண்டு காவல்துறையினர் கைது

217 0

கட்டட பொருட்கள் ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றின் சாரதியிடம் இருந்து 100 ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்;ட காவல்துறை அதிகாரிக ஒருவரும் காவல்துறை உதவியாளர் ஒருவரும் இலஞ்ச மற்றும் ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சிறுகற்கல், மண் மற்றும் மணல் கொண்டுச் சென்ற பாரவூர்திகளிடம் கையூட்டல் பெறுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கொட்டுவ – பன்னல வீதியில் அமைந்துள்ள சிங்கக்குழி வீதி சோதனை சாவடியில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் கையூட்டல் வழங்கிய பாரவூர்தியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.