மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர் திடீர் மரணம்

448 0

உடற்தகுதி சோதனையில் பங்குகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு பிரிவில் சேவையாற்றிய காவல்துறை அலுவலர் ஒருவர் திடீரென மரணித்துள்ளார்.

இவ்வாறு மரனித்தவர் மீரிகம – வலவ்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான சுமித்த செனவிரட்ண என்ற காவல்துறை உறுப்பினர் என தெரிவிக்கப்படுகிறது.

பிரமுகர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் தகுதி பெறும் பொருட்டு நேற்று காலை இந்த உடற்தகுதி சோதனை கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது மரதன் ஓடிக்கொண்டிருந்த அவர் கொழும்பு – மருதானை பிரதேசத்தில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதான் பின்னர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவரின் மரண விசாரணை மாலை கொழும்பு நீதிமன்ற மருத்துவ அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது, ரத்த நாளத்தில் இரத்த அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்தது.