இலங்கையின் வறட்சி பாதிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவி கோரிக்கை

532 0

இலங்கையில் வறட்சி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கான நிவாரணங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் அவசர நிதியம் 1 மில்லியன் டொலர்களுக்கான உதவித்தொகை கோரிக்கையை விடுத்துள்ளது.

கடந்த 40 வருடங்களில் இலங்கை தற்போது பெரும் வறட்சி பாதிப்பை சந்தித்துள்ளது.

இதனால் 1.2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 லட்சத்து 65 ஆயிரத்து 232 சிறார்களும் நேரடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக இந்த நிதி கோரப்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.