கடந்த 10 நாட்களில், 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம்!

47 0

நாட்டில், செப்டெம்பர் மாதத்தின் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில், தற்போது டெங்கு நோயாளர்களின் சத வீதம் குறைந்திருப்பினும், மழை காலம் ஆரம்பித்துள்ளதால், டெங்கு நுளம்பின் பெருக்கம், எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என, டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.