கட்டுப்பாட்டையிழந்த பஸ் மின்மாற்றியுடன் மோதியது!

55 0
அம்பலாந்தோட்டை நகரில் தனியார் பஸ் ஒன்று மின்சார சபையின் மின்மாற்றியுடன் மோதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அம்பலாந்தோட்டை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தனியார் பஸ்களுக்கிடையில் ஏற்பட்ட  போட்டி காரணமாக தனியார் பஸ்ஸில் ஏறிய ஒரு குழுவினர், சாரதியை தாக்கியதுடன், பஸ்ஸை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தை நோக்கிச் செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்டபோது  கட்டுப்பாட்டையிழந்த பஸ் மின்மாற்றியுடன் மோதியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.